![ரஷ்யா – உக்ரைன்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/10/download-4.jpg?fit=275%2C183&ssl=1)
பிப்ரவரி 24ம் நாளன்று அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா பலத்த போர்த் தாக்குதலை ஆரம்பித்தது. இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரு நாடுகளும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன, ஆனால் உக்ரைன் நோர்வே உட்பட நேட்டோ நாடுகளிடமிருந்து ஆயுத உதவியைப் பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபரில் ரஷ்யா நான்கு உக்ரேனிய மாவட்டங்களை கைப்பற்றி வலுக்கடடாயமாக தம்முள் இணைத்துக்கொள்ளுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.