சீனாவில் பஸ் கவிழ்ந்து 27 பேர் பரிதாப பலி

சீனாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 27 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

நம் அண்டை நாடான சீனாவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இங்குள்ள குயுஜு மாகாணத்தில் ௪௭ பயணிகளை ஏற்றிக்கொண்டு, நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாகச் சென்றது.அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் க ஹெபெய் மாகாணத்தில் இரும்புத் தாது எடுக்கும் சுரங்கத்துக்குள் சமீபத்தில் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி, ௧௪ தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை என்றும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE