துருக்கி,இஸ்தான்புல் நகரில் பாரிய குண்டுவெடிப்பு

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 81 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இஸ்தான்புல் துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரம், அத்துடன் 1923ம் ஆண்டுவரை அந்த நாட்டின் தலைநகராகவும் திகழ்ந்தது.

UD: – இஸ்தான்புல்லில் நடந்த வெடிப்பினால் நோர்வேஜியர்கள் பாதிக்கப்பட்டதற்கான எந்தப் பதிவும் தங்களிடம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என நோர்வே வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அல்லது உதவி தேவைப்படும் நோர்வே குடிமக்களை 23 95 00 00 என்ற எண்ணில் வெளியுறவு அமைச்சகத்தின் செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தொடர்பு ஆலோசகர் Ragnhild H. Simenstad கேட்டுக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE