யாழ்ப்பாண நகர பிதா மணிவண்ணனும் நகரசபை உறுப்பினர்களும் நோர்வே மண்ணில்

யாழ்ப்பாண நகர பிதா மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தலைவர் மயூரன் மற்றும் யாழ்ப்பாண நகரசபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் பேர்கன் நோர்வே நகரபிதா, பேர்கன் நோர்வே மாநகர சபை உறுப்பினர்கள், பேர்கன் பல்கலைக்கழகம், இன்னும் நமது தமிழ் உறவுகளையும் சந்திப்பதற்காக நோர்வே பேர்கன் நகருக்கு வருகை தந்துள்ளனர். கடந்த மே 4ம் திகதியிலிருந்து 7ம் திகதிவரை பேர்கன் மண்ணில் யாழ் மண்ணின் அபிவிருத்திக்கான செயல்திட்டங்களை மேற்கொள்ளவும், ஒரு சிறந்த உறவுப் பாலத்தினை அமைக்கவும் இவர்கள் நோர்வே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இன்னும் இங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், சுகாதார நிறுவனங்கள், உதவி அமைப்புகள் போன்றவற்றினையும் இவர்கள் சந்தித்து வருகின்றனர். இவர்களை நோர்வே நாட்டுக்கு அழைத்து சகல ஒழுங்குகளினையும் மேற்கொண்டு வருகின்றனர் பேர்கன் தமிழ் சங்கம். பேர்கன் தமிழ் சங்கமானது 1977ம் ஆண்டில் நோர்வே நகரில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தமிழ் சங்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE