ஆப்கன் பள்ளிகளில் குண்டுவெடிப்பு ஆறு பேர் உயிரிழப்பு

ஆப்கன் தலைநகரில், பள்ளிகள் அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகள் அருகே நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கனில் செயல்படும் ‘சேவ் த சில்ட்ரன்’ என்ற அமைப்பு, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE