சீனாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து: 51 பயணிகளின் நிலை?

வடக்கு சீனாவில் உள்ள மாகாணத்தில் பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பேருத்திலிருந்த இருந்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் 37 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். 12 பேரை தீவிரமாக தேடிவருதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சாங்ஷியில் மாகாணத்தில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். 1.90 லட்சம் ஹெக்டோ பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த மாகாணத்தில் உள்ள பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் உள்ளது. மழையால் அதில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE