![ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் உயிரிழப்பு](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2023/01/afghanistan-23.jpg?fit=680%2C408&ssl=1)
ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் 140 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதாகவும் குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்து குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 33 டிகிரியாக பதிவாகியுள்ளது.
இந்த உறைபனி காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குளிர் அலை மேலும் 1 வாரம் நீடிக்கும்’ என்றும் இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.