ரம்புக்கனை போராட்டத்தில் கண்ணீர்புகைப் பிரயோகம் – துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – 24 பேர் காயம்

ரம்புகனையில் 15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

ரம்புக்கனை நகரில் வீதிகள் மற்றும் ரயில் மார்க்கத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதேவேளை ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, காயமடைந்த போராட்டக்காரர்கள் உள்ளிட்ட 24 பேர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களில் 8 பெர் பொலிஸார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE