இன்று 23-ஆவது பன்னாட்டு தாய்மொழி நாள் 

தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று.

23-ஆவது பன்னாட்டு தாய்மொழி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தாய்மொழி தினத்துக்கான கருப்பொருள் ‘பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்று ஐ.நா அறிவித்துள்ளது.

கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், அதிலும் குறிப்பாக கல்வித் துறையில் தொலைதூரக் கல்விக்கு தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. கல்வியில் உள்ள மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் தொழில்நுட்பத்திற்கு உள்ளது என்பதை ஐ.நா உணர்ந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தொடர்பாடல் என்ற அம்சத்துக்கு இன்றியமையாதது மொழிதான் அவன் எந்த வகைக்குள் இருந்தாலும் அவனின் தாய்மொழி என்பது தாய்போன்ற உரிமைக்குரியது .
எங்கே எப்படி வாழ்ந்தாலும் தாய்மொழியை மறவாது இருப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE