திவால் நிலையில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம்,” என, அந்நாட்டு நிதி அமைச்சர் முப்தாஸ் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை ரத்து செய்யுமாறு உலக வங்கி வலியுறுத்தி வருகிறது. இலங்கையும் இதேபோல் தான் மானியம் வழங்கி திவாலாகி விட்டது. பெட்ரோல், மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு திவால் நிலைக்கு தள்ளப்படும்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை ரத்து செய்து விலையை உயர்த்தவில்லை என்றால் சர்வதேச நாணயநிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்காது. இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடு அழிவை நோக்கி செல்லும். கடுமையான முடிவுகளை எடுங்கள் என்று பிரதமரிடம் கூறினேன்.ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை பிரதமர் விரும்பவில்லை.

இலங்கையில் மருந்துப்பொருட்கள் வாங்க கூட பணம் இல்லை. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் பாகிஸ்தானும் அந்த நிலைக்கு தள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE