‘நாசா’வின் புதிய திட்டத்துக்கு தலைவரான இந்திய விஞ்ஞானி

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ வின், ‘சந்திரன் – செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்துள்ள அமெரிக்கா, அடுத்த கட்டமாக நிலவில் நீண்ட காலம் மனிதர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கான தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா என்ற விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் மென்பொருள் பொறியாளராகவும், பின், ‘ரோபாட்டிக்’ பொறியாளராகவும் பணியாற்றிய ஷாக்ட்ரியா, பின், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கான விண்கல ஆப்பரேட்டராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ‘நாசாவின் பெருமைக்குரிய மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த திட்டங்களில் இதுவும் ஒன்று. நிலவில் துணிச்சலாக பல ஆய்வுகளை நடத்தவும், செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக மனிதர்களை கால் பதிக்க வைக்கவும் இந்த திட்டம் உதவும். ‘இந்த திட்டத்துக்கான தலைவராக ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்’ என, நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE