பெப்ரவரி முதலாம் திகதி நாடு முடக்கப்படுமா

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்திய ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ இதனைத் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் , நிலைமைகளை ஆய்வு செய்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கிறோம். நாட்கள், மாதங்கள் வேகமாக நகர்கின்றன. அதனால் அடுத்த வாரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாரமாகும். பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன.

ஏப்ரலில் மீண்டும் ஒரு பண்டிகை காலம் வருகிறது, எனவே நாம் தற்போதே அது குறித்து கவனம் செலுத்தி சுகாதார பழக்கங்களுடன் செயற்படுத்தல் கட்டாயமாகும்.

 

பிப்ரவரி 1 ஆம் திகதி நாட்டை மூடுவது குறித்து எமக்கு இப்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE