Norway ஒஸ்லோவில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஒஸ்லோவில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Grønland T-banestasjon சுரங்கப்பாதை நிலையம் அருகே ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ட்விட்டரில் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு சந்தேக நபரை ஒஸ்லோ காவல்துறை தேடி வருகின்றனர்.

Operasjonsleder Line Skott சாட்சிகளிடம் பேசியதாகவும், ஆனால் பலர் இந்த சம்பவத்தை பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்தின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சாட்சிகள் சந்தேக நபர் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளனர்.
இது தற்செயலான துப்பாக்கிச் சூடு என காவல்துறை நம்பவில்லை. ஆனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்றும் செயல்பாட்டு மேலாளர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE