வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரும் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா வைத்தியசாலையின் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து பேர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE