கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்பு

சீனாவில் புயலில் சிக்கி சேதம் அடைந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவில் சமீபத்தில் புயல் உருவானது, இதற்கு ‘சாபா’ என பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடலின் தென்பகுதியில் கொந்தளிப்பு ஏற் பட்டுள்ளது. புயலில் சிக்கிய ஒரு கப்பலை மீட்க சீன கடற்படையினர் கடும் முயற்சிகள் செய்தனர். கடல் கொந்தளிப்பில் சிக்கி தள்ளாடிய கப்பல் நேற்று முன் தினம் அதிகாலை இரண்டாக உடைந்தது.

நேற்று முன் தினம் இரவு, புயல் கரையை கடந்தது. கப்பலில் இருந்த 30 பேர் கடலில் விழுந்து தத்தளித்தனர். கப்பலும் மூழ்கத் துவங்கியது. இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 27 பேரை மீட்கும் பணியில் சீன கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE