இன்றும் நாளையும் நடைப்பெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை!

2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விசேட நடைமுறை பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பரீட்சைக்கான நடைமுறை பரீட்சை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை இடம்பெற்றதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று பரவலடைய ஆரம்பித்ததால் நடைமுறை பரீட்சையில் பங்குப்பற்றாத விண்ணப்பதாரிகளுக்காக, இந்த இரு தினங்களில் விசேட நடைமுறை பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,  நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைமுறைப் பரீட்சை மத்திய நிலைங்களில் இன்று மற்றும் நாளைய தினங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE