![எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் – மைத்திரி](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/President-Maithripala-Sirisena.jpg?fit=720%2C450&ssl=1)
நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம் இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் போது எங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
குருநாகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை நேற்று (7) சந்தித்து உரையாடினார். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சந்தைக்குச் சென்ற 24 மணிநேரத்தில் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.