பிரித்தானியா முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலிஸார்

பிரித்தானியாவில் லிவர்புல் நகரில் பெண்கள் வைத்தியசாலை உள்ளது. இந்த வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் கார் ஒன்று வந்துள்ளது. வைத்தியசாலை வளாகம் அருகே வந்த போது அந்த கார் திடீரென வெடித்து சிதறியது.

இந்த வெடி விபத்தில் காரில் பயணம் செய்த நபர் உயிரிழந்தார். மேலும், கார் டிரைவர் டேவிட் பெரி படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் படுகாயமடைந்த டேவிட் பெரியை மீண்டு வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறு காயமடைந்த டேவிட் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதியானது.

இதனையடுத்து, பிரித்தானியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக முறையே 20, 21, 26 மற்றும் 29 வயது நிரம்பிய 4 பேரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE