காலிமுகத்திடலில் மீண்டும் பதற்றம் – பொலிஸார் குவிப்பு

காலிமுகத்திடலில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் சட்டத்தரணிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற அமைதியின்மைக்கு எதிராக தற்போது காலிமுகத்திடலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த விதம் மற்றும் அங்கிருந்த சிறார்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டத்தரணிகள் சங்கம் அமைதி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு முன்னால் வீதி தடைகள் போடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான வழியில் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் தற்போது வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் பெருமளவான பொலிஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE