கொவிட் ஓமிக்ரான் பி.ஏ5 வகை கொழும்பில் தீவிரம்!

உலகில் மிக வேகமாக பரவும் கொவிட் ஓமிக்ரான் பிஏ5 வகை கொழும்பு பகுதியில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

புதிய வகை மாறுபாடு முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பிரள்வு காரணமாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்.

கடந்த சில காலமாக உலகம் முழுவதும் கொவிட் அலையை உருவாக்குவதில் இந்த திரிபு வெற்றியடைந்துள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மரபணு பகுப்பாய்வின் படி, இந்த Omicron துணை வகை இலங்கையில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு இருக்கும் பிறழ்வுகள் காரணமாக நடத்தை பெரும்பாலும் டெல்டா வகையைப் போலவே இருப்பதால் அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் என்று உலக விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர் என்று பேராசிரியர் ஜீவந்தரா வலியுறுத்துகிறார்.

முந்தைய நோய் அல்லது தடுப்பூசிகள் மூலம் உடலில் கட்டமைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இந்தப் புதிய துணை வகைக்கு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மக்களிடம் பேராசிரியர் சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் பரவி வரும் கோவிட் (B.A 5) உப வகை எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தானதாக அமையலாம் என டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE