ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசியல்வாதிகள் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்ணான்டோ ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தலா 10 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE