போரிஸ் ஜோன்சன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் சந்திப்பு !

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விடயம் பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போயை நிலைமை குறித்து போரிஸ் ஜோன்சனுக்கு விளக்கமளித்ததாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு உதவுவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE