![முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/05/10-rr.jpg?fit=640%2C360&ssl=1)
கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் துயரங்கள், கொடுமைகள் தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. இக்கால கட்டத்தில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் எனும் புனித மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறும் நாளே முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும்.
இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களாலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களாலும் ஆண்டு தோறும் மே மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.