இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, நுகேகொடை மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள், கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை வழங்குவதற்கும், போக்குவரத்தை வழமையாக பேணுவதற்கும் பொலிஸார் ஏற்கனவே ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE