பிரித்தானியாவில் 30 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

பிரிட்டனில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் 3-வது ஊக்கத் தவணை (பூஸ்டா்) செலுத்த அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட Omicron வகை கொரோனா நாட்டில் பரவி வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், 30 முதல் 39 வயது வரையிலான 75 லட்சம் போ் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடுதலாக தகுதி பெற்றுள்ளனா். அவா்களில் 35 லட்சம் போ் திங்கள்கிழமையிலிருந்து (டிச. 13) பூஸ்டா் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்று தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துல்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE