இந்த மாதம் முழுவதும் இஞ்சி டீ தான் – மாளவிகா

கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த இரண்டு அலைகளின் போதும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக துவங்கியுள்ள மூன்றாவது அலையில் கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேசமயம் வருமுன் காப்போம் என்கிற நடவடிக்கையிலும் சிலர் இறங்கியுள்ளனர். நடிகை மாளவிகா மோகனன், தான் அந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை தனது சமூகவலைதளம் மூலம் உறுதி செய்துள்ளார். இஞ்சி மற்றும் புளி கலந்த தேனீர் தான் இந்த மாதம் முழுவதும் தான் குடிக்க போவதாக கூறியுள்ள மாளவிகா மோகனன், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என நம்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE