உக்ரைனுடனான மோதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களை ரஷ்யா வெளியிட்டது!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, உக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும், 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870 க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3,700 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவலை ரஷ்யா வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

இருப்பினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் யுக்ரைனில் இருந்து இது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 நாட்களில் 6,000 ரஷ்ய துருப்பினர் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமிர் செலன்ஸ்கி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE