இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 100 கட்டடங்கள் இடிந்து சேதம்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள முக்கிய தீவான ஜாவாவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

இதனால் யோக்யகர்தா மற்றும் மத்திய ஜாவா மாகாணத்தில் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதில் பள்ளிகள், சுகாதார மையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் 93 வீடுகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதம்அடைந்தன.

வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படாத நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE