முடங்கியது டுவிட்டர் – தற்காலிக புதிய கட்டுப்பாடுகளை விதி்த்தார் எலான் மஸ்க்

பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள டுவிட்டர் வலைதளம் உதவுகிறது. பல்வேறு துறை பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் டுவிட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் இறங்கியுள்ளது.

இதனிடையே டுவிட்டர் சேவை முடங்கி உள்ளதாக பயனர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில் நாள் ஓன்றுக்கு 6 ஆயிரம் பதிவுளை மட்டுமே பார்வையிடலாம்.

அங்கீகரிக்கப்படாத டுவிட்டர் கணக்குகளில் நாள் ஓன்றுக்கு 600 பதிவுளை மட்டுமே பார்வையிடலாம்.

அங்கீகரிக்கப்பாடத புதிய டுவிட்டர் பயனாளர்கள் தினசரி 300 பதிவுகளை மட்டுமே பார்வையிட முடியும். இவ்வாறுஅவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE