ஒவ்வொரு நிறுவனத்திலும் கணக்காய்வு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் பூரணமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

கடந்த அரசாங்கத்தில் தமது அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களிலும் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற முறைகேடுகள் பற்றி தனக்கு முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செய்த குப்பைகளுக்கெல்லாம் பொறுப்பேற்க முடியாது என்பதால் தாம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். பத்தரமுல்லை, செத்சிரிபாய முதலாம் கட்டத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையில் இன்று (4) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE