பாணின் விலையை 50 ரூபாவினாலும், பணிஸ் விலையை 25 ரூபாவினாலும் குறைக்க முடிவு

அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும் , பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

அதன் தலைவர் என்.கே ஜயவர்தன செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார் .

பேக்கரி தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

பாண் மற்றும் பணிஸ் என்பனவற்றை பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளது . அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் .

இதனடிப்படையில் அரசாங்கம் தலையிடுமாயின் பாண் ஒன்றை 50 ரூபாவினாலும் , பணிஸ் ஒன்றை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE