ரணில் பதவி விலக வேண்டும் : காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கோரிக்கை!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே தமது இரண்டாவது முக்கிய கோரிக்கை என குறிப்பிட்டனர்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு முடிவை எடுத்துள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சே ஆட்சியால் ரணில் விக்கிரமசிங்கே கொண்டு வரப்பட்டுள்ளார்.எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கும் எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE