நாடு முழுவதும் அவசரகால சட்டம், பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு, நுழைவாயில்களும் பூட்டு

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் இன்று முதல் (18) அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளது

இதேவேளை, பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE