கோட்டாவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ சென்ற SV788 விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தும் போதே சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயம் ஒன்றின் மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய கோட்டாபய ராஜபக்சவுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE