இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்!

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலமைகளை சமாளிக்கும் வகையில் இலங்கைக்கு சீனா அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீன வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உதவிகள் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமெனவும் சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE