ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் – எதிர்க்கட்சி

மக்களை அழித்து, நாட்டிற்கு அழிவை கொண்டு வந்த ராஜபக்ச தலைமுறையும்,ராஜபக்ச அரசாங்கத்தையும் நிச்சயமாக வீட்டுக்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் மாத்திரம் நின்று விடாது வரம்பற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக இல்லாமல் ஒழிக்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதனை நிறைவேற்றும் பொருட்டு மக்கள் ஆசியை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்த ஐக்கிய கமத்தொழிலாளர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் பேரணி நேற்று (09) தெஹியத்தகண்டி நகரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியிருந்ததோடு அப்பகுதி விவசாயிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE