கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுங்கள் – இரா.சாணக்கியன்

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான டைனமைட் மீன்பிடி முறை காரணமாக கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகள் உள்ளடங்களான கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE