ஆளுநர் ஜீவன் தியாகராயா தலைமையில் வன்னி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

கௌரவ வட மாகான ஆளுநர் ஜீவன் தியாகராயா அவர்களின் தலைமையில் வன்னி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வவுனியா ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது

28.01.2022 அன்று அலரி மாளிகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் அடுத்த கட்டமாக இக் கலந்துரையாடல் அமைந்துள்ளது.

இதில் வன்னி தொடர்பான தேவைகள், பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை சார்ந்த வளர்ச்சி தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

வன்னி தொடர்பான தேவைகள், பிரச்சனைகள் பற்றி வவுனியா மாவட்டத்தின் கிராம அபிவிருத்திசங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்திசங்கங்கள் சமாசத்தின் தலைவரும் சமூக பொருளாதார நிறுவனத்தின் இயக்குனருமான துரைராசா சுதாகர் விளக்களித்தார்

இக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்டத்திற்கான விசேட பிரதிநிதி நிரோசனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE