ஆப்கானிஸ்தானுக்கு 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் வெள்ளை மாளிக‍ை!

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிக‍ை அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு தலிபான் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆப்கானிஸ்தான் பெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த உதவியானது சுதந்திரமான மனிதாபிமான அமைப்புகளின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும்.

தங்குமிடம், சுகாதாரப் பாதுகாப்பு, அவசர உணவு மற்றம் குடிநீர் தேவை, சுகாதாரம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவித் தொகை பயன்படுத்தப்படும்.

ஆப்கானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து நாட்டின் நீண்டகாலப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE