கொழும்பு பேராயரின் அதிரடி நகர்வு – பரபரப்பாகும் கொழும்பு அரசியல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Cardinal Ranjith) அரசுக்கு எதிரான நடவடிக்கையில் நேரடியாக களம் இறங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் முக்கிய நகர்வாக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கிறித்தவ உறுப்பினர்களையும் சந்திப்பதற்கான அழைப்பை அவர் விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேராயர் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மற்றும் பல விடயங்கள் இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேராயரின் இந்த அழைப்பு கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE