“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முன்னுரிமை”

பொருளாதாரம் மீண்டு வந்ததன் பின்னர் அடுத்த வருடம் தேர்தலை வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

ரோட்டரி மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முன்னுரிமை என குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், செயல்படும் ஜனநாயக சமுதாயத்தை நிறுவுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, பணப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த வாரத்திற்குள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய திகதியை மறுபரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். .

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்த யோசனைக்கு, ஐந்து முன்னுரிமைப் பகுதிகளைத் தவிர, திறைசேரி உபரி நிதிகளை பயன்படுத்த வேண்டாம் என முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த வாரம் அங்கீகாரம் வழங்கியதன் பின்னணியில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE