சீனாவில் திடீர் வெள்ளம்16 பேர் பலி

சீனாவில் கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 16 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காணாமல் போயுள்ளனர். நம் அண்டை நாடான சீனாவில் கடந்த மாதம் முதல் கன மழை பெய்து வருகிறது.

வடமேற்கு கிங்காய் மாகாணம், டத்தோங் ஹூய் நகரம் ஆகிய பகுதிகளில் கன மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளம் பாய்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 16 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து, 2,000க்கும் மேற்பட்ட மீட்பு படையினர், 160க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE