![காலிமுகத்திடல் பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸ் வண்டிகள் திடீர் மாயம்!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/04/2vbn.jpeg?fit=800%2C600&ssl=1)
காலிமுகத்திடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வண்டிகள் திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பொலிஸ் வண்டிகள் எதற்காக அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த பொலிஸ் வண்டிகள் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.