அமெரிக்க ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற தமிழரின் ஓவியம்!

அமெரிக்க ஓவிய கண்காட்சியில் தமிழர் வரைந்த சிவன் மற்றும் பெரியார் படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஸ்டுடியோ 103 எனும் கண்காட்சி மையத்தில் கலைக்கண்காட்சி நடைபெற்றது. பல நாட்டு மக்களின் ஓவியம் மற்றும் கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த கலைக்கண்காட்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர் வரைந்த பெரியார் படம் மற்றும் சிவன் படம் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியா சார்பாக இவர் வரைந்த ஓவியம் மட்டுமே இந்த கண்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கண்காட்சியில் நவீன ஓவியங்களும், பல்வேறு நாடுகளின் கலை, பண்பாட்டை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை அமெரிக்காவில் வாழும் பல்வேறு நாட்டு மக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE