13 வயது சிறுவன் துஷ்பிரயோகம்: பிக்குவுக்கு விளக்கமறியல்

வட்டவளை – டெம்பல்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையொன்றின் பிக்குவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த இன்று (23) உத்தரவிட்டார்.

குறித்த விகாரையில் இச்சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிலையில், 21ஆம் திகதி பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை வட்டவளை காவல் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, வட்டவளை காவல்துறையினரால் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, நேற்று பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி தோட்ட மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE