ஒக்லஹோமா நகரில் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் கட்டப்பட்டு வரக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். ஒக்லஹோமா நகரில் 5 தளம் கொண்ட நட்சத்திர ஹோட்டலும், அடுக்குமாடி குடியிருப்பும் அடுத்தடுத்து கட்டப்பட்டு வந்தன. நேற்று இரவு 5வது மாடியின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது பலமான காற்று வீசியதால் கொழுந்துவிட்டு எரிந்த தீ கட்டிடம் முழுவதும் தீவிரமாக பரவியது. தீ விபத்து குறித்து கிடைத்த தகவலை அடுத்து விரைந்து சென்ற ஒக்லஹோமா தீயணைப்புத்துறை வீரர்கள் 80 பேர், நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரப்பர் கலவையை கொண்டு மாடியில் மேல் பூச்சு செய்யப்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE