வடகொரியா – சீனா இடையே மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து!

கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், வடகொரியா மெல்ல தளர்த்த ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக சீனாவை அண்மித்துள்ள அதன் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, வடகொரியா – சீனா இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிக்காத நாடு என கூறிவரும் ஜனாதிபதி கிம் ஜொன்ங் உன் தலைமையிலான வடகொரிய அரசாங்கம், தடுப்பூசி தொடர்பாக இதுவரை எந்த நாட்டின் உதவியையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE