7 மாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்து சிறுவன் பலி

பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள 7 மாடிக் குடியிருப்பு தொகுதி ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்த சிறுவர் ஒருவர் பலியானார்.

குறித்த கட்டடத்தின் 7ஆவது மாடியில் இருந்து வீழ்ந்த 15 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த சிறுவன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கீழே விழுந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE