நேற்றுமுதல் முதல் மக்கள் பாவனைக்கு வந்த மீரிகம – குருநாகல் பகுதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், மீரிகம இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மீரிகம, நாக்கலாகமுவ, தம்பொக்க, குருணாகல், யக்கஹபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு ஒழுங்கைகளை கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்குள் இந்த நெடுஞ்சாலைகளின் பணிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE