![கண்டுபிடிக்கப்பட்டார் -காணாமல் போன சிறுமி](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/2v.jpg?fit=620%2C350&ssl=1)
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த, சிறுமியின் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது , இதனையடுத்து சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.